தமிழகம், புதுவை, உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனிடையே, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் கடந்த 19-ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.இது தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக உருவெடுத்து.
மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், நேற்றிரவு தேஜ் அதி தீவிர புயலாக வலுப்பெற்றது தென்மேற்கு அரபிக்கடலில் சகோதரா நகருக்கு 330 கி.மீ கிழக்கு-தென்மேற்கு, சலாலா நகருக்கு 690 கி.மீ தெற்கு-தென்கிழக்கு மற்றும் அல் கைடா நகருக்கு 720 கி.மீ தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.இதனால் காரைக்கால் அடுத்த வாஞ்சூர் தனியார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.