புதுச்சேரி சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத் துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏ எம்எஸ் படிப்புகளுக்கான 3வது சுற்று கலந்தாய்வுக்கு வரும் 13ம் தேதி முதல் 14ம் தேதி காலை 11 மணி வரை பாட விருப்பங்களை சமர்ப்பிக்கலாம். சென் டாக்கில் பதிவு செய்யப் பட்ட அனைத்து மாண வர்கள் மற்றும் முதல் மற்றும் இரண்டாம் சுற்றில் சீட் ஒதுக்கப்பட்டவர்கள் உட்பட அனைவரும் வேது சுற்று கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுடைவர்கள்.
இதில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டும் பதிவு கட்ட ணம் செலுத்த வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொது, ஓபிசி, எம் பிசி, ஈடபிள்யூஎஸ், ஈபிசி, பிசிஎம், பிடி பிரிவினர் ரூ.2 லட்சமும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.5 ஆயிர மும், நிர்வாக ஒதுக்கீட்டு மற்றும் வெளிநாடு வாழும் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் ரூ.2 லட்சமும் பதிவு கட்டணமாக சென்டாக் கணக் கில் செலுத்த வேண்டும்.
பதிவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே 3வது சுற்று கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.முதல் மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் சீட் பெற்றவர்கள், 3வது சுற்று கலந்தாய்வுக்கு பதிவு கட்டணம் செலுத்தாமல் பங்கேற்கலாம். 3வது சுற்று கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்படாதவர்களுக்கு பதிவு கட்டணம் திருப்பி தரப்படும்.சீட் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேராத மாணவர்களிடமிருந்து பதிவு கட்டணம் பறிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்க்கவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.