திருவாரூர் மாவட்டம்,நன்னிலம் தாலுக்கா திருப்பாம்புரம் பகுதியில் தென்காளஹஸ்தி என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் (இராகு-கேது ஸ்தலம்) திருக்கோயிலில் உள்ளது.இங்கு கடந்த 8 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதற்கிடையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று மாலை வருகை தந்து சுவாமி சாமி தரிசனம் செய்தார்.முன்னதாக மூலவர் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி பின்னர் ராகு-கேது ஸ்தலத்தில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடத்தினார்.முதல்வர் ரங்கசாமியுடன் என்ஆர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜவஹர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ரங்கசாமி திருப்பாம்புரம் இராகு-கேது ஸ்தலத்தில் சாமி தரிசனம் செய்தது பெரும் புயலை கிளப்பி உள்ளது.