காரைக்கால் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் அறிவிப்பின்படி, உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாயத்துகளில் 12 வருடங்களுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை.
எனவே கிராம பஞ்சாயத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் , காரைக்கால்,உள்ளாட்சித் துறை அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கௌரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.