காரைக்காலில் நவராத்திரியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற ஸ்ரீகயிலாசநாதர் சுவாமி ஆலயத்தில் ஸ்ரீ சுந்தராம்பாள் தாயார் நவராத்திரியின் முதல்நாள் சுபாவம் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கயிலாசநாதர் ஆலயத்தில் ஸ்ரீசுந்தராம்பாள் தாயார் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று சுபாவம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நவராத்திரி முதல் நாளான இன்று அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீசுந்தராம்பாள் தாயாருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும்,மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்